Select Menu

தலைப்பு செய்திகள்

சேனல் கார்னர்

அரசு கேபிள்

DTH செய்திகள்

டிஜிட்டல் இந்தியா

உள்ளூர் சேனல்

நீதிமன்ற செய்திகள்

தொழில்நுட்பம்

வீடியோ

» » » BARC வீடுகள் பட்டியலுக்கு லஞ்சம் - தமிழகத்தில் விஜிலன்ஸ் குழுவினர்...!!


TnTelevision 05:37 0








தொலைகாட்சி சேனல்களின் பார்வை அளவீட்டு   நிறுவனமான BARC நிறுவனத்தின் தலைவர் திரு. பார்த்தோதாஸ் குப்தா அவர்கள் கடந்த வாரத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசியது நாடு முழுவதும் மீடியா மற்றும் விளம்பர துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது
BARC மீட்டர் நிறுவப்பட்ட வீடுகளின் முகவரியை வெளிப்படுத்த தங்களது ஊழியர்களை சில தொலைக்காட்சி நிறுவனங்கள் அணுகுவதாக புகார் தெரிவித்தார். எனினும் அவர் ஊர் பெயர் என எதையும் வெளியிட மறுத்துவிட்டார்.
கடந்த ஏழு மாதங்களில் ஒரு சில நகரங்களில்... தொழிலாளர் உறுப்பினர் ஒருவரை 10 வீட்டு முகவரிகள் பெயர்களை வெளியிடுவதற்கு ரூ 1 லட்சம் ரொக்கம் பணம் கைமாறியுள்ளது மேலும் மற்றொரு இடத்தில் ரூ,. 4 லட்சம் என இது போன்ற சில சம்பவங்கள் நடந்துள்ளதாக திரு.தாஸ்குப்தா பதில் கூறினார், டிஷ் டிவி நிர்வாக இயக்குனர் ஜவஹர் கோயல் அவர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
BARC தலைவர் திரு.தாஸ்குப்தா கூறுகையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 25 விழுக்காடு பேனல்கள் மாற்றபடுவதாக தெரிவித்தார்...
தற்போது BARC ஆராய்ச்சியில் சுமார் 22,000 வீடுகளை கண்காணிக்கிறது மேலும் இந்த வீடுகளில் சுமார் 25,000 மீட்டர்கள்  நிறுவப்பட்டுள்ளது.
அவர் மேலும் ஒரு சிலவற்றை குறிப்பிடுகையில் ஒரு சில டிவி சேனல்களின் நிர்வாகிகள் சில தங்கள் நிகழ்ச்சிகள் பார்க்க BARC குழுமத்தில் இணைந்துள்ள பேனல் வீடுகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிகளும் நடந்துள்ளதாக மற்றொரு சம்பவத்தை உதாரணமாக சுட்டிக்காட்டினார்.
இந்த சம்பவம் குறிப்பாக தென் பகுதி இந்தியாவில்(தென் தமிழகத்தை அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்) ஒரு நகரத்தில் BARC பேனல் உள்ள வீடுகளுக்கு சென்று குறிப்பிட்ட இருவேறு சேனல்களில் இருந்து இரண்டு நிகழ்ச்சிகளை பார்க்கவேண்டும் என வீடுகளில் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்தார்
இது போன்ற சம்பவங்கள் நடந்தும் ஏன் BARC இது போன்ற செயல்களில் ஈடுபடும் சேனல்களின் பெயர்களை வெளியிட்டு அனைவரும் அறிந்துகொள்ளும்படி செய்வதில்லை என கேட்டதற்கு... தாஸ்குப்தா அவர்கள் கூறுகையில் நாங்கள் அதை செய்யவே விரும்புகிறேன் "என்று கூறினார்ஆனால் இது சரியான உறுதியான ஆதாரம் பெற கடினமாக உள்ளது. அரை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதுமேலும் நாம் அதை வெளியிட செய்யவே விரும்புகிறேன்... என தெரிவித்தார்.  
தென் தமிழகத்தில் என்றால்...தமிழ் சேனல்களா...!?! என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுகிறது.
"மேலும் அவர்  கூறுகையில் ஒரு குறிப்பிட்ட மெட்ரோ நகரத்தில் சுமார் 100 BARC பேனல் வீடுகளின் முகவரி கொண்ட பட்டியல் ஒரு சுற்றி சுற்றி வந்தது... ஆனால் அந்நகரத்தில் இருந்ததோ வெறும் 7 BARC மீட்டர் பொருத்தப்பட்ட வீடுகளே இருந்தன... அதுவும் தற்போது மாற்றப்பட்டுவிட்டது
இது போல் எண்ணற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன... இவற்றையெல்லாம் தடுக்கவும் மற்றும் கட்டுக்குள் வைக்கவும் BARC ஒன்றுக்கும் மேற்பட்ட விஜிலன்ஸ் எனப்படும் கண்காணிப்பு அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்
இந்நிலையில் தற்போது... BARC அமைப்பினர் தமிழகத்தில் களமிறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது ... இதனால் அடுத்ததடுத்த நாட்களில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என மீடியா தகவல்கள் தெரிவிக்கின்றன.  
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது...!!

எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்...!!   

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments

Leave a Reply